பச்சை சுண்டைக்காய் குழம்பு (Turkey Berry Gravy )


பச்சை சுண்டைக்காய் குழம்பு ,Turkey Berry Gravy ,


பச்சை சுண்டைக்காய் குழம்பு (Turkey Berry Gravy )



Turkey Berry என்று ஆங்கிலத்தில் அழைக்க படும் , பச்சை சுண்டைகாய் இன்றைய சுழலில் கிராம புறங்களில் எளிதாகவும், நகர்ப்புறங்களில் அரிதாகவும் கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு ,அவர்கள் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிய இந்த பச்சை சுண்டைக்காய் குழம்பு (Turkey Berry Gravy ) வைத்து கொடுப்பார்கள்.

இன்றைய காலத்தின் சர்க்கரை நோய்க்கும் இது ஒரு அரு மருந்தாக கருத படுகிறது .

தேவையான பொருட்கள் 


பச்சை சுண்டைக்காய் -1 கப்
பூண்டு -10 பற்கள்
சின்ன வெங்காயம் -1 கப்
தக்காளி -2
புளி-ஒரு எழுமிச்சை பழம் அளவு
தேங்காய் துருவல் -1/2 கப்
வெந்தையம் -1 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லி தூள் -2 ஸ்பூன்
நல்லெண்ணெய் -4 ஸ்பூன்
கடுகு -சிறிது
உப்பு -தேவையான அளவு
பெருங்காயம் -ஒரு சிட்டிகை

செய்முறை 


பச்சை சுண்டைக்காய்களை தட்டி குழம்பில் போட வேண்டும் .ஒவ்வொன்றாக தட்ட கூடுதல் நேரம் பிடிக்கும். எனவே சுண்டைக்காய்களை நன்றாக கழுவி சுத்தபடுத்தி ஒரு பிளாஸ்டிக் பையினில் இட்டு அதை சிறிய அம்மி கல்லில் வைத்து தட்டவும்.அவை அனைத்தும் ஒரே நேரத்தில் பிளவு படும். நேரமும் குறைவு.

ஒரு கனமான வாணலியில் ,நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,கடுகு போட்டு பொறிய விடவும். அதில் ஒரு சிட்டிகை பெருங்காய தூள் போட்டு அது பொரிந்ததும் ,வெந்தையம், சீரகம் இவற்றை போட்டு தாளிக்கவும். பின்பு தட்டிய சுண்டைக்காய்களை போட்டு நன்றாக வதக்கவும். அடுப்பை சிம் இல் வைத்து ஒரு 5 நிமிடம் வதக்கிய பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை போட்டு மீண்டும் வெங்காயம் வதங்கும் வரை வதக்கவும்.

அதில் நறுக்கிய தக்காளி போட்டு மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லி தூள் இவற்றை போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி, அதில் தேங்காயை அரைத்த விழுதை சேர்க்கவும். எழுமிச்சம் பழம் அளவுள்ள புளியை நன்றாக கரைத்து அந்த நீரையும் ஊற்றி குழம்பை நன்றாக கொதிக்க வைத்து, இறுதியாக,அதில் தேங்காயை அரைத்த விழுதை சேர்க்கவும் .கருவேப்பிலை தூவி இறக்கவும்.

குறிப்பு 

விதை நிறைய இருப்பதால் பச்சை சுண்டைக்காய் கசக்குமோ என்ற பயம் வேண்டாம் .நிச்சயம் கசப்பு இருக்காது .மாதம் ஒருமுறை இந்த பச்சை சுண்டைக்காய் குழம்பு (Turkey Berry Gravy ) உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பது உறுதி

Previous
Next Post »