About Us

இந்த வலைப்பக்கத்தை பார்வையிட்டமைக்கு நன்றி !

சமையல், உணவு என்னும் சொற்களை எல்லாம் நாம் சுலபமாக கடந்து சென்று விட இயலாது. உண்மையில் சமையலும், அதன் அபரிமிதமான சுவையும் ஒரு வித மாய கலை (Magic) என்றே சொல்லலாம் . அதிலும் இந்திய சமையலும், விருந்தோம்பலும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. நான் கற்று கொண்ட சமையல்களை பிறருக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்த வலைப்பக்கம் உருவாக்கப்பட்டது. பிறந்து வளர்ந்தது அனைத்தும் நீலகிரி மாவட்டம் என்பதால், இயற்கையோடு ஒன்றி வாழும் வாய்ப்பு இயல்பாகவே அமைந்து விட்டது. குளிர் சாதன பெட்டியில் இல்லாத, வீட்டில் விளைந்த, அப்போது பறித்து சாப்பிட்ட காய்கறிகள், பழங்கள், நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கும், சமைக்கும் வித்தியாசமான உணவுகள் பற்றியும் மற்றவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்ற ஆவல் மிக அதிகமாக இருந்தது. இதன் மூலம் நீங்களும் ஒரு சில வித்தியாசமான உணவுகளை பற்றி தெரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.